இன்ஸ்டாகிராமில் சிறுமிகளையும், பள்ளி மாணவிகளையும் குறி வைத்து ஆபாச மிரட்டல் விடுத்து வந்த பொறியியல் பட்டதாரியை, லாவகமாக திட்டம் தீட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வரும் சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது தாய் வைத்திருக்கும் ஆண்டிராய்டு போனில் தனக்கென்று இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி, கிடைக்கும் நேரங்களில் புது புது புகைப்படங்களை எடுத்து அதில் பதிவிட்டு வந்துள்ளார் சிறுமி.

தன்னுடைய புகைப்படங்களுக்கு லைக்குகள் வர வர பரவசம் அடைந்த சிறுமி, தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பொழுதை கழித்துள்ளார். இந்த நிலையில் சந்துரு என்ற வாலிபர் சிறுமியின் நண்பர் பட்டியலில் இணைந்து, சிறுமி போடும் போட்டோக்களை புகழ்ந்து பேசி வந்துள்ளார். இதையடுத்து இருவரும் சாட்டிங்கில் பேசி வந்தனர்.


Popular posts
மலேரியாவுக்கு ஏற்ற ‘சூப்’
இங்கிலாந்தின் அரச குடும்பம் என்றாலே உலக அளவில் தனி மரியாதை உண்டு. அந்த நாட்டு அரசு எடுக்கும் முடிவுகளில் அரச குடும்பத்தின் முக்கிய பங்கு இருக்கும்
இங்கிலாந்தின் அரச குடும்பம் என்றாலே உலக அளவில் தனி மரியாதை உண்டு. அந்த நாட்டு அரசு எடுக்கும் முடிவுகளில் அரச குடும்பத்தின் முக்கிய பங்கு இருக்கும்
இங்கிலாந்தின் அரச குடும்பம் என்றாலே உலக அளவில் தனி மரியாதை உண்டு. அந்த நாட்டு அரசு எடுக்கும் முடிவுகளில் அரச குடும்பத்தின் முக்கிய பங்கு இருக்கும்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 68 லட்சத்தை நெருங்கியது!